சாளரத்தின் வலி
கா.சாகுல்
மூடிவிடுங்கள் சாளரத்தை
கட்டிய வீட்டுக்குள்
குருவி வந்து கூடுகட்டும்.
கட்டட்டுமே.
குருவியின் அழகைத்
தினமும் ரசிக்கும்
பாக்கியம் தானே.
அடைக்கலம் தேடிக்
கட்டிய கூட்டுக்குள்
முதலில் முட்டைகள். . .
அடுத்துக் குஞ்சுகள். . .
அடிக்கடி வாய்பிளக்கும்
இரைக்காக. . .
தாய்க் குருவிக்குத் தெரியுமா?
மின்விசிறி ஓடாத நேரத்தில்
உள்ளே வர வேண்டுமென்று
‘விருட்’டென்று ஒரு சத்தம்
அநாதைகளாய். . .
அத்தனை குஞ்சுகளும்
மூடிவிட்டேன் சாளரத்தை.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|