ஆடுகளும் அத்தை மகளும்
மு. செல்லா
காட்டில்
ஆட்டுக் கிடை போட்டேன்
புழுக்கை உரத்திற்காய்.
அய்யே அசிங்கம்’ என்றாள்
பட்டணத்து அத்தை மகள்.
ஆடு
அருகே புல் மேய்ந்து
அங்கேயே புழுக்கையிட்டது
நிலத்திற்கு உரமாய்.
மூத்திரமும் அங்கே தான்.
அத்தை மகளோ
உள் நாட்டில் படித்து
அமெரிக்கா போனாள்
வேலைக்கு.
ஆடுகள் அறிந்தன
அத்தை மகள் அறியாத
‘நமக்கு நாமே’.
அத்தைமகள் தான் படித்தவள்
ஆடுகளும் நானுமல்ல.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|