கவிதை
எதார்த்த தூது
சூ.ம.செயசீலன்
கிழக்கு இமை
சூரியக் கண்ணை
உள்ளிழுத்து மூடுவதை
இமைமூடாது பார்த்தும்
மனக்கண்ணில் எப்போதும்
நிழலாடுகிறது அந்தக்காட்சி
அருகே அமர்ந்து
மலர்வதைப் பார்த்ததும்
சிந்திக்கும் நேரமெல்லாம்
அறியாமலேயே புன்னகைக்கிறது இதயம்
மழைநாள் இரவில்
விழித்தே உறங்கி
விடிந்தும் விடியாமலும் மாடிக்குப்போய்
தலைகுளித்த மரங்களைப் பார்த்ததும்
விழித்துக் கொள்கிறது மனம்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
|