துன்பம்
மகுடேஸ்வரன்
இறைச்சிக் கடையைக் கடக்கும்பொழுது
கூடுதலாகத் துடிக்கிறது இதயம்
மலரைக் கிள்ளும்பொழுது
கூசுகிறது எலும்பு
விபத்துக் களத்தின் உறைந்த ரத்தம்
துயிலிரவைக் கலைக்கிறது
ஒழுகும் தர்மங்கள்மீது அசூயை ஊட்டுகிறது
வதைபடும் கைதியின் நொய்ந்த உடல்
வரவர
பொறுக்க முடியாமலாகிவிட்டது
மனசாட்சியின் அழுகை.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|