Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
மே 2006
ஒரு சூழ்நிலைக் கைதியின் மரணம்
ராஜசேகரன்

நிச்சயிக்கப்பட்ட உன் மரணமும்
என் மரணமும் கொட்டடிக்குள்
என்றல்லவா சட்டப்புத்தகங்கள்
அங்கலாய்க்கின்றன.

களைப்பின் கேவல்களென்று
ஊரே வேடிக்கை பார்க்கிறது
களைப்புற்ற பந்தயக் குதிரை போலல்லவா
நீயும் நானும் எல்லோர் முன்னும்
பந்தாடப் படுகிறோம்.

அசந்த நேரத்தில் நான் தப்ப முயல
நீ தூங்கிக் கொண்டிருக்கிறாய்.
நான் தூங்க முயலும் அந்நேரம்
நீ சுவரேறிக் குதிக்க ஆயத்தமாகிறாய்.

வறண்ட போலித் தனங்களால்
என் மார்பின் முடிகள்
ஸ்பரிசம் காணாமலேயே
தூக்குக் கயிறு மாட்டிவிடுமோ
என்கிற பயம் என்னில்.

எத்தனை காலம் தான்
நம் உறவைத் தள்ளிப் போட முடியும்.

இன்று இரவிலாவது
சுவரேறிக் குதிக்கும் என் மனதை
இறுகக் கட்டியணைத்து
உன் விருப்பத்திற் கேற்ப
என்றெண்ணியபடி
சுவற்றில் பசலைக் கையோடு. . .



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.