பூ மரம்
ந.பெரியசாமி
தேவையா இது
தலையிலடித்துக் கொண்ட
மனைவியின் ஏளனம். . .
வேற பொளப்பில்ல
இன்னையோட எல்லாம் சரியெனும்
அலட்சியப் பார்வை உதிர. . .
ஆயிரமாயிரம் பூக்களை
முன் கண்டிருந்த போதும்
மனம் லயிக்க
உடலெங்கும் சிறகு முளைத்தது.
கை கொப்புளிக்கத் தோண்டிய
குழியில் நட்ட மரம்
யாருக்கும் தெரியாமல்
மிகு நேர்த்தியாய்
பூத்திருக்க நாளில். . .
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|