யாருக்கும் தீங்கிழைக்காத ஒருவன்
மகுடேசுவரன்
யாருக்கும் தீங்கிழைக்காத ஒருவன்
இந்த உலகில் இருக்கிறானா?
அவன்
இன்னும் பிறக்கவில்லையா?
அல்லது
ஏற்கனவே இறந்துவிட்டானா?
நெடும் வரலாற்றில்
அவனைப்பற்றி ஒரு குறிப்பும் இல்லையா?
அப்படி ஒருவனைப் பற்றி
யாரிடமும்
நம்பிக்கை நிலவவில்லையா?
அகழ்வாராய்ச்சியாளன்
உதட்டைப் பிதுக்குகிறான்
விரக்தியாய்ச் சிரிக்கிறான்
தீர்க்கதரிசி
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|