பொழிவு சா.முகில் கவிதைகள்
குதறிய உரையாடலோடு
ரத்தம் குடிக்கும் வார்த்தை
தூவி
மௌனமாய் விரைந்தாய்
பிறிதொருநாள்
அந்த
மௌனமாய் கூப்பிடும்
குளத்தாங்கரை மஞ்சள் மௌனம்
இன்னும்
என் பார்வையில்
அதிர்கிறது.
***
என் காதலின்
கலைந்து போன
வடிவங்கள்
வாடகை வீட்டின்
அலமாரியில் உட்கார்ந்து
தலைசீவி
ஒத்திகையிடுகிறது
தொலைத்த சாவியை
யோசிக்கும்
மனசு
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|