விடியல்
க. அம்சப்ரியா
குழந்தையை மிரட்டும்
மாயக்காரனைப் போல
மெல்ல வருகிறது இவ்விரவு.
பாம்பின் பசிதீர்க்க வைத்திருக்கிற
அம்முட்டையை உடைத்துப் பசிதீர்க்கும்
பெரும் ஆவலாதியுடன் நெருங்குகிறது
இரவு இப்போது
சொந்தமற்ற ஒருவனின் பிடியில்
மெல்ல இறுகி அழுகையாகி
பின் அது பெருமிதத்தில் விம்முகிறது.
இரவின் வருகைக்காக காத்திருந்தவன்
ஓர் அகதியைப் போல்
வேடிக்கை பார்த்திருக்கையில்
திகழ்கிறது அவ்விடியல்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|