Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
பிப்ரவரி 2006
இலக்கிய முற்றம்

யாரோ தட்டுகிறார்கள்
மு. செல்லா

என் வீட்டுக் கதவை
யாரோ...
தட்டுகிறார்கள்.

கைகள் வலிக்கும் வரை
கரங்கள் சோரும் வரை
தட்டுவதாகத் தான் படுகிறது
கதவு திறக்கும் முன்
ஓய்ந்து போகும்
ஓசையுடன்.

ஒவ்வொரு முறையும்
தட்டப்படும் போது
கதவு திறந்து
நானவளைப்
பார்த்து விடுவேன் தான்
திறக்கப்பட வேண்டுமேயென
அமைதி காத்து
மறந்தும் விடுகிறேன்.

ஒரேயொரு முறை
தட்டும் முன்னே
திறந்து விட்டதால்
சந்திக்க வேண்டியதாகிவிட்டது
கதவுக்க வெளியே
கை ஓங்கி
பயந்து நிற்பதானவனை.

பெயர் கேட்டேன்
சொன்னான்
முகவரி கேட்டேன்
சொன்னான்
பின்னர் விசாரிக்கவேயில்லை
என் வீட்டு
முகவரியே சொன்ன அவனை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.