சந்திப்பு
சரவணன் 1978
மகிழ்ச்சியின் கரையில் படிந்து கிடக்கின்றன
கடக்கவேண்டிய நெடும் பாதையின்
துன்பங்களும் துயரங்களும்.
கரையை அடைந்துவிட்ட தோணியிலிருந்து
கரையில் இறங்கிக் காலூன்ற நினைக்கிறேன்.
கரை முன்னோக்கிச் செல்கிறதா?
தோணி பின்னோக்கிச் செல்கிறதா?
தோணியிலேயே இருக்கிறேன் -
கரையில் காலூன்றும் காலத்தை
எதிர்பார்த்தபடி.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|