சந்திப்பு
சரவணன் 1978
மகிழ்ச்சியின் கரையில் படிந்து கிடக்கின்றன
கடக்கவேண்டிய நெடும் பாதையின்
துன்பங்களும் துயரங்களும்.
கரையை அடைந்துவிட்ட தோணியிலிருந்து
கரையில் இறங்கிக் காலூன்ற நினைக்கிறேன்.
கரை முன்னோக்கிச் செல்கிறதா?
தோணி பின்னோக்கிச் செல்கிறதா?
தோணியிலேயே இருக்கிறேன் -
கரையில் காலூன்றும் காலத்தை
எதிர்பார்த்தபடி.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
|