வார்த்தை ஜாலம்
பா. திருச்செந்தாழை
அலுக்கத் துவங்கிய
உன் உரையாடலில்
கிளை திரும்பும் பறவையென
வந்தமர்கிறது முற்றுப்புள்ளி.
பின் வந்த
உன் சொற்களெல்லாம்
தெருநாயின் குட்டிகளைப் போல
சாலையில் திரியத் துவங்குகின்றன.
*****
பகலெங்கும்
என் அறை சுவற்றில்
தன் துண்டு கண்ணாடியின் வழி
வெளிச்சம் பூக்கச் செய்த
எதிர் வீட்டுச் சிறுமி
பின்னரவின் சிறுநீர் கழிக்கும்
வேளையில்
மறுபடியும் ஆட்டுகிறாள் கண்ணாடியை.
பூக்காத பூவினால் குழம்பியவள்
பகலில் மட்டுமே
பூப்பூக்கும் என நினைத்தபடி
தூங்கச் செல்கிறாள்
அப்பூவின் பெயரை யோசித்தவாறே.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|