சிதறிக்கிடக்கும் உண்மைகள்
நந்தவனம் சந்திரசேகரன்
போலிகளால்
நிரப்பி வைத்திருக்கிறோம்
வீடுகளையும்
வீதிகளையும்
நிஜங்களின்
நிழல்கள் கூட
தலை நீட்ட முடியவில்லை
விகாரமாய் எழுந்து
பயங்காட்டுகின்றன
போலிகள்
தேடுதலுக்கான
அவகாசமோ
தேர்ந்தெடுப்பதற்கான
பொறுமையோ எதுவுமின்றி
அவசரப்பிடிகளில் சிக்கி
நசுங்கியபடியே
நகர்கிறது வாழ்க்கை
எதிர்பாராத
கோர விபத்தைப்போல்
உயிர்த்துடிப்பின்றி
சிதறிக்கிடக்கின்றன
உண்மைகள்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
|