சிதறிக்கிடக்கும் உண்மைகள்
நந்தவனம் சந்திரசேகரன்
போலிகளால்
நிரப்பி வைத்திருக்கிறோம்
வீடுகளையும்
வீதிகளையும்
நிஜங்களின்
நிழல்கள் கூட
தலை நீட்ட முடியவில்லை
விகாரமாய் எழுந்து
பயங்காட்டுகின்றன
போலிகள்
தேடுதலுக்கான
அவகாசமோ
தேர்ந்தெடுப்பதற்கான
பொறுமையோ எதுவுமின்றி
அவசரப்பிடிகளில் சிக்கி
நசுங்கியபடியே
நகர்கிறது வாழ்க்கை
எதிர்பாராத
கோர விபத்தைப்போல்
உயிர்த்துடிப்பின்றி
சிதறிக்கிடக்கின்றன
உண்மைகள்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|