கவனியுங்கள்
ஜீவன் பென்னி
யாருமற்ற வீதியில்
ஒரு போர்வை வியாபாரி தன்
சைக்கிளை உருட்டிச் செல்கிறார்
கிழவி ஒருவள் பூ விற்கிறாள்
சிலர் தள்ளிவிட்ட ஒரு வாகனம் விரைகிறது
சிறுமி ஒருவள் அழுகாமல் செல்கிறாள்
ஒரு மரத்திலிருந்த பூக்கள் சிதறிக்கிடக்கின்றன
ஒரு கிழட்டு நாய் கம்பியில் சிறுநீர் கழிக்கிறது
ஒரு பூனை தெருவைக் கடக்கிறது
வீட்டுக் கூரையில் ஒரு காகம் கரைகிறது
தெருக்குழாயில் தண்ணீர் வரப்போவதற்கான
காற்று வருகிறது
எங்கிருந்தோவொரு தொலைபேசி மணி கேட்கிறது
இன்னும்...
யார் சொன்னது
யாருமற்ற வீதியென்று!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|