Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஏப்ரல் 2006
ஹைபுன்கள்
அன்பாதவன்

உனது நகரத்தில் எழுகிறது பேரோசை
வெடித்த குண்டுகளில் நகரெங்கும் பீதிப்புகை
சிதறிய சதைத் துண்டங்களில் கருகல் நாற்றம்

மிக வருத்தத்துடன் தானிதை செய்ய நேர்ந்தது
சற்று யோசி
‘ஒரு நாயைக் கொல்வதாயினும்
விசாரித்து தான் கொல்வோம்’
பெருமையில் சிறுமாந்தவர்களின்
போர் விமானங்கள் எமது தேசத்தில்
தூவியது பூக்களையா... ?

எமது எண்ணெய் வயல்களை
அன்னை நிலங்களை சிதறடித்த
உனது ஏவுகணைகளில் இருந்ததென்ன
கனிவும் அன்பும் கருணையுமா?

பயங்கரவாதிகளென எம்மை
முத்திரைக் குத்துமுன்
பாருன் கோரமுகத்தை கண்ணாடியில்

அடுத்த வெடிப்பை புலனாய்வதற்குள்
நினைவில் கொள் ஒன்றை:
‘எதிரிகளே எமது ஆயுதத்தை தீர்மானிக்கிறார்கள்’

மருத்துவ மனைகளிலா பதுங்கு குழிகள்
பார்வையற்ற
வான் தாக்குதல்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.