Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
மே 2009
நூல் அறிமுகம்


உடல்நலம், மருந்துகள், அரசியல்
எஸ். சுகுமார், பாரதி புத்தகாலயம்,
ரூ.5, பக். 16

நோய்களை போக்க உண்ணும் மருந்துகளில் கூட எப்படி தில்லுமுல்லு, அரசியல் நடக்கிறது என்பதை இந்நூல் விளக்குகிறது. காப்புரிமை சட்டங்கள் உள்ளன. மருந்து நிறுவனங்கள் காப்புரிமை காலத்தை நீட்டிக்க செய்யும், தவறான யுக்திகள் பற்றியும், மருந்து-களின் விலைகள் எவ்வாறு உயர்த்தி நிர்ணயிக்கப்-படுகின்றன மக்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்படு-கிறார்கள் என்பதைப் பற்றியும் இந்நூலில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. போலி மருந்துகளும் கள்ளச் சந்தை-யில் கிடைக்கின்றன. பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு என்ன, மாற்று திட்டங்கள் எவை என்றும் இந்நூல் தெளிவாக கூறுகிறது.

சோசலிசத்திற்கு மாற்று ஏதும் இல்லை, சமீர் அமின்,
தமிழில்: ஆர். பெரியசாமி,
பாரதி புத்தகாலயம், ரூ.10 பக். 24

எகிப்து நாட்டு பொருளாதார நிபுணர் சமீர் அமினுடைய நேர்காணலின் தமிழாக்கமே இந்நூல். அமெரிக்காவில் வெளிப்-பட்டு இன்று உலகநாடுகளை அலைக்கழிக்கின்ற பொருளாதார நெருக்கடிக்கு முதலாளித்துவ முறையே அடிப்படையான காரணம் என்பதை ஆழமாக ஆய்வு செய்துள்ளது இச்சிறுநூல்.

முகவரி இல்லா மனிதனும், முகமே இல்லாக் கடவுளும்,
கவிஞர் மு. நந்தா, சிந்தனாலாயா, சென்னை 48, ரூ. 75 பக். 148

இந்நூலில் 11 தலைப்புகளில் கட்டுரைகள் எளிமையான வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன. நூலாசிரியர் ஆன்மிகம் என்பது என்ன என்று சொல்லத் தொடங்கி, இயேசு, புத்தர், ரூஸோவையும் சேர்த்துக் கொண்டு ஜென் கதைகள், பகவத்கீதை மூலமாகவும் தன் கருத்துகளை வாசகர்கள் புரிந்து கொள்ளும் வகையில் கூறுகிறார். ‘தந்தை பெரியார்’ என்ற தலைப்பில் உள்ள கட்டுரையில் தந்தை பெரியாரைப் பற்றி கூறும் கருத்துகள் மிகவும் சுவாரசியமாக உள்ளது. சிறு, சிறு கதைகள் மூலம் எடுத்துக்-காட்டுகளுடன் ஆசிரியர் கருத்துகளை விளக்குவது வாசகர்களை படிக்கத்தூண்டும்.

ஆரம்பகால தமிழ் சினிமா (பாகம் 1,2),
அறந்தை நாராயணன்,
விஜயா பப்ளிகேஷன்ஸ், சென்னை 32, ரூ.100 ரூ.120, பக். 120 & 192

ஆரம்ப கால சினிமா இதழான பொம்மையில் தொடராக வெளிவந்த இந்தக் கட்டுரைகள் சினிமாவின் வரலாற்றையும், அதில் பங்கு பெற்ற கலைஞர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பை வழங்குகிறது. மேலும் இந்நூலில் அரிய புகைப்படங்கள், 1931 முதல் 1951 வரை வெளியான படங்களின் பட்டியல் மற்றும் அன்றைய நட்சத்திரங்களின் ஆட்டோகிராஃப் ஆகியவை இணைக்கப்பட்ட அரிய ஆவணம் இது.

குழும முதலாளித்துவத்தின் நெருக்கடி,
பதிப்பு : தேவ. பேரின்பன், வெளியீடு : தென்னக ஆய்வு மையம், சென்னை 14, ரூ. 85 பக். 168

பொருளாதார உலகமயம் வளமான வளர்ச்சி காலத்தில் தேசிய பொருளாதாரம் சிறுமை-படுத்தப்பட்டது. ஆனால் தற்போதைய பொருளாதார வீழ்ச்சியால் தனக்கான ஒரு தேசிய பொருளாதாரத்தை கட்டமைக்க கோருகின்ற தருணத்தில் இந்நூல் இதைப் பற்றிப் பேசுகிறது. இத்தொகுப்பில் ஏ.பி. பரதன், லியோபாரிட்ச், சாம்கிண்டின், சாஸ்டாஸ் பனயோடகிஸ், சமீர் அமீன், வின்சென்ட் நாவரோ, நவீன் சந்திரா, ஜான் பெல்லமிஃபாஸ்டர் ஃபிரெட்மக்டாப், பால் பர்கெத் ஆகியோரின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

சா. கந்தசாமி -- முத்துக்கள் பத்து, தொகுப்பு: திலகவதி, வெளியீடு: அம்ருதா, சென்னை 116.
ரூ.70 பக். 160

தமிழின் நவீன சிறுகதை படைப்பாளிகளில் முக்கியமான-வர்களில் ஒருவர் சா.கந்தசாமி. இவரின் சிறுகதைகளில் பத்து சிறுகதைகளை தேர்வு செய்து வெளியிட்டுள்ள இத்தொகுப்பில் உள்ள கதைகள் பல அனுபவங்-களை தரக் கூடியதாக அமைந்-துள்ளது இதன் சிறப்பு.

சிதறல், த. சுமித்ரா, வெளியீடு:
சு. தர்மராஜ், ஒரத்தநாடு, தஞ்சை.
ரூ. 50, பக். 102

அவ்வப்போது நாளிதழ்களில் வெளியான கவிதைகளையும், மற்ற சில கவிதைகளையும் சேர்த்து தொகுப்பாக வந்து இருக்கும் இக்கவிதையில் வானத்திற்கு கீழே உள்ள அனைத்தும் பாடு பொருட்களாக கொண்டுள்ளன. இக்கவிதையை எழுதியது பெண்ணாக இருந்தாலும், இந்நூலை வாசிக்கும் வாசகனை ஒரு பெண்ணாக மாற்றி விடுகிற லாவகம் இந்தக் கவிதைக்கு உண்டு. இது இந்நூலின் பலத்தையும், அழகையும் கூட்டச் செய்கிறது.

தமிழரின் கூத்தியல்
வெளியீடு : சித்திரம்,
விலை ரூ. 190, பக். 415

தமிழரின் பண்பாடுகளைச் சொல்லும் கூத்துக்கலையின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றி விளக்குகிறது இந்நூல். கூத்துக்கலையை அறிமுகப்படுத்தி அதன் வகைப்பாடுகள், ஒப்பனைக் கூறுகள், பார்வையாளர், செல்வாக்கு போன்ற பலவற்றை ஆராய்கிறது இந்நூல். அதோடு மட்டுமல்லாமல் தெருக்கூத்தின் குறைபாடு, தேய்வுகள் பற்றியும், அதன் வளர்ச்சிக்கான முயற்சிகள் தேவைகள் பற்றியும் இந்நூல் விளக்குகிறது. தெருக்கூத்து பற்றிய படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

மீனவர்களின் பஞ்சாயத்து தீர்ப்புகள்
வெளியீடு : மணிமொழி பதிப்பகம், விலை ரூ. 125, பக். 212
பெரும் பிரச்சனைகளைத் தீர்க்க நீதிமன்றங்களுக்குச் செல்வது என்பது ஒரு பக்கம் செலவு. மறுபக்கம் பல நாள்கள், ஏன் பல ஆண்டுகள் கூட ஆகும் தீர்ப்பைப் பெறுவதற்கு. ஆனால் கிராமங்களில் பஞ்சாயத்துத் தீர்ப்புகள் சில மணி நேரங்களில் கிடைக்கும். இன்றும் பல கிராமங்கள் தமது பிரச்சனைகளை நீதிமன்றத்திற்கு செல்லாமல் பஞ்சாயத்திற்குள்ளேயே தீர்த்துக் கொள்கின்றன. அதேபோல், மீனவர்களின் பிரச்சனையை மையமாக கொண்டு வழங்கப்பட்ட பஞ்சாயத்து தீர்ப்புகளின் தொகுப்பாகும். 22 தீர்ப்புகள் கொண்ட இந்நூலில் எப்படி காலதாமதமின்றி, பாரபட்சமின்றி தீர்ப்புகள் வழங்கப்பட்டன என்பதை தெளிவாக விவரிக்கிறது.

ஜெயகாந்தன் சிந்தனைகள்
அம்ருதா வெளியீடு, சென்னை. விலை: ரூ.70 பக். 184

இந்தத் தொகுப்பில் எழுத்-தாளர் ஜெயகாந்தனின் அனுபவங்-களைக் கொண்ட சிந்தனைகள் அழகாக கூறப்பட்டுள்ளது. ஏன் எழுதுகிறேன், ஆட்டோகிராப் என் சிந்தையை கவர்ந்த நூல்கள், தமிழச்சியின் தத்துவம், ஊழலை ஒழிக்கமுடியுமா? போன்ற தலைப்பு-களில் உள்ள கட்டுரைகள் அவருடைய எண்ணங்-களை ஆர்வத்துடன் படிக்கத் தூண்டும். புத்தகங்-களைப் படிப்பதைவிட அதிகமாக மனிதர்களையும் வாழ்க்கையையும் படிக்கிறேன் என்கிறார். அவருடைய அனுபவச் சிந்தனையிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன.

சான்றோர் பொன்மொழிகள்
அறிவுப் பதிப்பகம், சென்னை. விலை : ரூ.75 பக். 212

இந்நூல் புகழ்பெற்ற, அனுபவ-மிக்க பலருடைய கருத்துகள் அடங்கிய தொகுப்பு ச. குமரால் பொன்மொழிகளாக, கொடுக்கப்-பட்டுள்ளது. அரிஸ்டாட்டில் முதல் நமது முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம் வரை, பைபிள், குரான், பகவத்கீதை, போன்றவற்-றிலிருந்தும் கருத்துகள் எடுக்கப்-பட்டுள்ளன. காந்தி, புத்தர், விவேகானந்தர், ராஜாஜி, ஈவெரா, முதலமைச்சர் கருணாநிதி போன்ற தலைவர்கள் கருத்துகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. உயர்ந்த எண்ணங்களை கருத்துகளை உள்ளடக்கிய இந்த நூலை படிப்பவர்களுக்கு கிளர்ச்சியூட்டும், எண்ணங்களை வாழ்க்கையை மேம்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

நினைக்கப்பட வேண்டிய வர்க்கப் போராளி சிங்காரவேலர்,
தொகுப்பு : முத்தையா வெள்ளையன்
பூபாளம் புத்தகப் பண்ணை, புதுக்கோட்டை.
விலை ரூ. 65, பக். 128

பொதுவுடைமைச் சிற்பி சிங்காரவேலர் பற்றி அறிய வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. அவர் மீனவ சமுதாயத்-தில் பிறந்ததால் அவருக்குரிய மரியாதை கொடுக்கப்பட-வில்லையோ என்று நினைக்கத் தோன்றும் இந்நேரத்தில் ஈ.வே.ரா, அறிஞர் அண்ணா, ஏ.எஸ்.கே., சி.எஸ். சுப்ரமணியம், முதல்வர் கருணாநிதி, மா.பொ. சிவஞானம்,

கி. வீரமணி போன்ற தலைவர்கள் சிங்காரவேலரைப் பற்றி கூறிய கருத்துகள் அடங்கிய கட்டுரைகளின் தொகுப்பே இந் நூல். சிங்காரவேலரைப் பற்றி வேறொரு பார்வையில் பார்க்கத் தூண்டும் நூல்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com