நூல் அறிமுகம்
கருணாநிதிக் கவுண்டர், தாழை மதியவன்
வெளியீடு: மனக்குகை, ரூ 50 பக். 128, சென்னை 33.
இந்நூலில் 11 கதைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையும் சமுதாயத்தில் உள்ள பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் என்ற மார்க்கத்தை ஏற்கும்முன், ஏற்றபின் ஒருவனின் நிலைபற்றி ஒரு கதை கூறுகிறது. மற்றொன்று மனித வெடிகுண்-டாக மாறிய “சாஜிதா’’ பற்றிய ஈராக் கதை. கடைசிக் கதையில் கருணாநிதி கவுண்டரால் தத்துபிள்ளையாக வளர்க்கப்பட்ட தோழரின் மகன் “பகத்’’ இராணுவப் பணியில் இந்தியா_பாகிஸ்தான் போரில் இறந்துவிட்டான். அவன் தன் சர்டிபிகேட்டுகளில் இறந்துவிட்ட தந்தையின் பெயரை எழுதாமல், தத்து பிள்ளையாக வளர்த்த கருணாநிதி கவுண்டரின் பெயரை எழுதி வைத்திருந்தான் போன்ற கதைகள் இத்தொகுப்பில் உள்ளன.
பல்துறை வித்தகர் அ.கி. பரந்தாமனார், அ.ப. சோமசுந்தரன்
வெளியீடு : அல்லி நிலையம், சென்னை 7, பக். 133, ரூ 70
தமிழறிஞர் அ.கி. பரந்தாமனார் பற்றிய ஆய்வுக் கருத்தரங்கப் பொழிவுகளின் (2006, 2007, 2008) தொகுப்பு தான் இந்நூல். பத்துத் தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன. பல்கலைக்கழக பேராசிரியர்கள் பலர், அவர்களது கட்டுரைகளின் மூலம், அ.கி. பரந்தாமனாரின் தமிழ்ப்பணி, மனிதநேயம், கவிதைகளின் ஆளுமை போன்ற பல கோணங்களில் ஆராய்ந்து விவரிக்கின்றனர். அ.கி. பரந்தாமனாரின் கவிதைகளும் பிற்சேர்க்கையில் இணைக்கப்பட்-டுள்ளன. இந்நூல் அ.கி. பரந்தாமனார் தமிழுக்கு ஆற்றிய பணியை அறிந்து கொள்ள உதவும்.
தீ மிதி, மஞ்சுளா,
வெளியீடு: கீற்று வெளியீட்டகம், குமரி மாவட்டம்.
ரூ. 50 பக். 108
கவிதைகளின் தொகுப்பான இந்நூலில் ஆசிரியரின் எண்-ணங்கள், கருத்துகள் தெளிவாக தெரிகின்றன. சிதைக்கப்பட்ட மனோபாவத்துடன் ஊறிக் கொண்டிருந்த நம்பிக்கைகளை உடைத்தெறிந்துவிட்டு, தீயும் மிதி தீயாய் மிதி, தீரும் வரை மிதி, வழி எதுவானாலும் பரவாயில்லை என்று கனலாய் தன் கவிதைகளை இந்நூலாசிரியர் தந்திருக்கிறார்.
எங்கே... என் மைனா குஞ்சுகள்? (நாடகம்)
பி.சி. சண்முகம், வெளியீடு: சிற்றுளி, கோவை 42.
பக். 109, ரூ 60
வாழ்க்கையை தேடிப் பறக்கிற மைனாக்களின் கதை தான் இந்நூல். 28 கதாப்பாத்திரங்களை கொண்ட நாடகம் இது. தனி நபரின் சுயநல உணர்வால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி விளக்குகிறது. இந்த நாடகத்தின் மூலம் நல்ல கருத்துகளை விதைக்க வேண்டும் என்று இந்நூலாசிரியர் எண்ணியதின் முயற்சிதான் இந்நூல்.
ஏழாவது ஊழி (சுற்றுச்சூழல் கட்டுரைகள்)
பொ. ஐங்கரநேசன், வெளியீடு: சாளரம், சென்னை 15,
பக் : 431 ரூ. 250
இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த இந்நூலாசிரியர் சுற்றுச்-சூழல் ஆய்வுகளை மேற்கொண்டு பல கட்டுரைகளையும் எழுதி-யுள்ளார். அவர் எழுதிய 42 கட்டுரைகள் தொகுப்புதான் இந்நூல். இந்தியாவும், இலங்கையும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதை சுட்டிக் காட்டுகிறார். “காதினுள் பாயும் நஞ்சு’’, “செல்லிடப்பேசிகள் வரமா_சாபமா’’ ‘தாய்ப்பாலிற் சிறந்ததொரு அமிர்தமும் இல்லை’’ காப்புரிமை என்னும் பொருளதார ஆயுதம் என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள் வாசகனை படிக்கத் தூண்டுவதோடு, சிந்திக்க வைக்கும். இன்றைய சூழலில் இயற்கை எந்த அளவுக்கு மாசுபடுத்தப்பட்டு வருகிறது என்பதை அறிந்துகொள்ள, சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு மிகவும் பயனுள்ள நூலாகும்.
கடவுளுக்கு ஒரு சாபம், பி.ஆர். ரமேஷ்
வெளியீடு: பெரிய அழகு பதிப்பகம் மதுரை 20
ரூ.40, பக். 78
காதல் வயப்பட்ட ஒரு ரவுடியின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை, அவன் உள்ளம் படும்பாட்டை அழகாக கதைவடி-வில் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. ஹார்மோன்களால் ஏற்படும் காதல் நோய் ரவுடியையும் விட்டு வைக்கவில்லை. ரவுடி என்ற மனிதனையும் எப்படி பாதிக்கிறது என்பதை இந்நூல் விளக்குகிறது.
கர்வாலோவின் தேடல், கே.பி. பூரணச்சந்திர தேஜஸ்வி,
வெளியீடு: அட்சரா, சென்னை 116, ரூ. 100, பக். 206
கன்னடமொழியில் சாதனை படைத்து வருகிற ‘கர்வாலோ’ என்ற நூலின் தமிழாக்கம் தான் இந்நூல். இயற்கையின் மீது உள்ள ஆர்வம் இந்நூலில் வெளிப்படு-கிறது. கன்னட மொழியில் 15 பதிப்புகள் செய்யப்பட்ட இந்நூல் வாசகனுக்கு நல்ல சிந்தனையும், படிக்கும் ஆர்வத்தையும் தூண்டும் என்பதில் ஐயமில்லை.
ஆதி திராவிடர் வழக்காறுகளும் பண்பாடும்,
கோ. கீதா, வெளியீடு: ஜெபகீர்த்தி பதிப்பகம், திண்டிவனம் 4
பக். 136, ரூ 70
இந்நூலில் திண்டிவனம் வட்டத்தை சேர்ந்த வெளியனூர் எனும் கிராமத்தில் வசிக்கும் ஆதி திராவிடர்களின் வழக்காறுகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வு செய்யப் பெற்றுள்ளன. அம்மக்களின் வழிபாட்டு முறைகள் மூலமாக வெளிப்படுகின்ற பண்பாட்டி-னையும் இந்நூல் விளக்குகிறது.
ராஜம் கிருஷ்ணன், முத்துக்கள் பத்து
தொகுப்பு: திலகவதி, வெளியீடு: அம்ருதா சென்னை 116
விலை: 70 பக். 160
எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அவர்களின் சிறந்த பத்து கதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையிலும் வருபவர்கள் நடை-முறை வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சாதாரண மனிதர்களை கொண்டு இருப்பதால், சமூகம் சார்ந்த படைப்பான இச்சிறு-கதைகள் வாசகனின் உள்ளத்தில் பாதிப்பை உண்டாக்குகின்றன.
ஆ. மாதவன், முத்துக்கள் பத்து
தொகுப்பு: திலகவதி, வெளியீடு: அம்ருதா சென்னை 116. ரூ 50, பக். 128
எழுத்தாளர் ஆ. மாதவனின் பத்து சிறுகதைளைக் கொண்ட இந்நூல் திலகவதியால் தொகுக்-கப்பட்டுள்ளது. மற்ற எழுத்தா-ளர்கள் கருப்பொருளாக வைக்கத் தவறிய விஷயங்களையும், தயங்கிய உள்ளடக்கங்களையும் தம் சிறுகதைகளில் பதிவு செய்கிறார் எழுத்தாளர். வாழ்வின் மீது நம்பிக்கையிழந்த விளிம்புநிலை மனிதர்கள் வாழ்வியல்தான் ஆ. மாதவன் சிறுகதைகளில் இடம்பெற்றுள்ளன.
கந்தர்வன், முத்துக்கள் பத்து
தொகுப்பு: திலகவதி, வெளியீடு: அம்ருதா சென்னை 116
ரூ 50, பக். 136
எழுத்தாளர் கந்தர்வனின் சிறந்த பத்து கதைகளின் தொகுப்பு தான் இந்நூல். எழுத்தாளரின் சிறுகதை ஒவ்வொன்றும் யோசிக்க வைப்பவை. ஸ்திரத் தன்மை உடையவை. வாசகனால் எளிதில் மறக்கமுடியாத அளவுக்கு மனத்தில் இடம் பிடிப்பவை. வாழ்வின் சாரத்தை எழுத்தின் மூலமாக பதிவு செய்தவர் முக்கிய எழுத்தாளர்களில் கந்தர்வனும் ஒருவர்.
சொப்பு, தலித் சிறுகதைகள், அம்மணி
வெளியீடு: சாளரம் சென்னை 91, ரூ.40, பக். 87
இந்நூலில் 12 சிறுகதைகள் உள்ளன. இக்கதைகளை படித்த பிறகு சில சம்பவங்களும், சில பாத்திரங்களும் மனதில் நிழலாடும். அம்மணியின் கதைகள் யதார்த்தமாக உள்ளவை. அவை பேச்சு வழக்கில் எழுதப்பட்ட, சாதிக் கொடுமைகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிற கிராமத்து மனிதர்களின் கதைகள். கதைகள் அனைத்தும் எளிமையான நடையில் இருப்பது இந்நூலுக்கு சிறப்பு.
ஈழத்தில் நாடகமும் நானும், கலையரசு க. சொர்ணலிங்கம்
வெளியீடு: ஈழவர் திரைக் கலை மன்றம்,
ரூ. 220, பக். 288
ஈழத்து நாடகத் தந்தை கலையரசு க. சொர்ணலிங்கம் “தினகரன்’’ பத்திரிகையில் தொட-ராக எழுதியதை 1968ஆம் ஆண்டு நூலாக வெளியிட்டதின் மறு-பதிப்புதான் இந்நூல். ஈழத்து நாடக வரலாற்றுடன் தமிழ்-நாட்டு நாடக நடப்புகள் பற்றியச் செய்திகள் இந்நூலில் ஏராளமாக உள்ளது. நான்கு வயதில் தொடங்கிய நாடகத்தின் மீது உள்ள ஈடுபாடு கடைசி காலம் வரை இருந்ததை ஆசிரியர் விளக்குகிறார். நாடகங்கள் அவருக்கு முன்னால் எப்படி இருந்தது. அவருடைய காலத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் போன்றவற்றை அழகாக விவரிக்கிறார். ஏறக்குறைய நூறாண்டுகளுக்கு முன் அவர் நாடகத்தில் நடித்த போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்களையும் சேர்த்திருப்பது இந்நூலுக்கு மெருகு ஊட்டுகிறது. நாடக வரலாற்றை அறிய, இந்நூல் சிறந்த ஆவணமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|