நூல் வெளியீடு
பாஸ்கரதாஸ் நூல் வெளியீடு
24.05.2009 அன்று கோவில்பட்டியில் த.மு.எ.க.ச. மாநில செயலாளர் ச. தமிழ்செல்வன்_வெள்ளைத்தாய் இணையரின் இல்லத் திருமண விழாவில் மணமக்கள் சித்தார்த்தன், பிரதீபா ஆகியோர் பாரதி புத்தகாலயத்தின் முருகபூபதி தொகுத்த ‘பாஸ்கரதாஸின் டைரிக் குறிப்பு’ என்ற நூலை வெளியிட பாஸ்கரதாஸின் மகள் இந்திராணி பெற்றுக் கொண்டார். மேலும் கோணங்கியின் சலூன் நாற்காலி-யில் சுழன்றபடி (அடையாளம்), முருகபூபதியின் செம்மூதாய் (ஆழி), ச.தமிழ்ச்செல்வனின் பெண்மை என்றொரு கற்பிதம் (பாரதி) ஆகிய நூல்களும் வெளியிடப்பட்டன.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|