புதிய நூலகம் திறப்பு விழா
மதுரை சர்வோதய இலக்கியப் பண்ணையின் செயலாளர் என். நவநீதகிருஷ்ணன் அவர்களின் மகன் ந. நந்தகுமார் நினைவை போற்றும் வகையில் நவநீதநந்தகுமார் மாளிகை, இந்துமதி நந்தகுமார் நூலகம் திறப்பு விழாவும், பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பு நிகழ்ச்சியும் 1.6.2009 அன்று காலை 10.15 மணிக்கு விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், கிருஷ்ணாபுரத்தில் நடைபெற்றது.
நூலகத்தை திரைப்பட பாடல் ஆசிரியர் பா. விஜய் திறந்து வைத்தார்.இந் நிகழ்ச்சியை எஸ். வயிரவன் (குமரன் பதிப்பகம்), இராம. இலட்சுமணன் (உமா பதிப்பகம்), வி. சங்கர நாராயணன் (ஏரிஸ் புக்ஸ் இண்டர்நேஷனல்), ஆர்.எஸ். சண்முகம் (ஸ்ரீசெண்பகா பதிப்பகம்), சி.த. மணி (பாரதி பதிப்பகம்) ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். பா. தேவேந்திரபூபதி, காந்தி கண்ணதாசன், ரவி தமிழ்வாணன் மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர்.
கவிதா பப்ளிகேஷன்ஸ் சேது சொக்கலிங்கம் நன்றியுரை கூறினார்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|