|
கடிகாரத்து நொடிமுள்ளோசை
பா. ராஜா
கரைந்தொழுகி
நிலவு காணாமற் போன
நள்ளிரவு நிசப்தத்தில்
எங்கோ மூடாமலிருக்கும்
தெருக்குழாய் உதிர்க்கும் நீர்த்துளிகளை
கடிகாரத்து நொடிமுள்ளோசை
எண்ணிக் கொண்டிருக்கும் இரவில்
கருப்புப் பாயை விரித்து வைத்து
விழித்திருக்கிறது வானம்
உன்னை ஞாபகமூட்டியபடி.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|