|
பரிகசிக்கும் பறவைகள்
கன்னிக்கோயில் ராஜா
பிரபஞ்சத்தை விழுங்கிய
கடலிலிருந்து
ஒரு சில துளிகளைக்
கவர்ந்து செல்கின்றன பறவைகள்
பறக்க எத்தனித்து
தோற்றுப்போன
மனிதர்களின் நிலையை எண்ணி
பரிகாசம் செய்த
பறவைகளுக்கு மத்தியில்
கடந்து செல்கின்றன
கால ஓட்டத்தில்
மனிதர்களைச் சுமந்து கொண்டு
அலுமினியப் பறவையொன்று...
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|