கல்யாண்ஜி கவிதை
நல்லபசி,
நட்சத்திரவிடுதியில் விருந்து,
தாழ்ந்து தொங்கும் விளக்குகளின்
முணு முணுக்கிற வெளிச்சம்
வேறொரு தேசத்தினரின்
வேற்று உணவுகள்.
அறிமுகமற்ற முகங்களின்
பாவனைச் சிரிப்பினில் முக்கியெடுத்த
மேலோட்ட உரையாடல்கள்.
பாதங்களை வருடும்
தேங்காய் நார் விரிப்புகள்.
அதீதப் பணிவுடன்
ஒலியற்று இடம்மாற்றி
வைக்கப்படுகிற
தட்டுகள், கிண்ணங்கள்.
புராதனங்களுடன் நவீனங்களை
இணைக்கிற மூங்கில் கூரையில்
மிளகு அப்பளம், சந்தூர் இசை.
தொட்டியில் நீந்துகிற மீன்களும்
வளைய வருகிற
இன்னொரு மேஜைக் குழந்தையும்
ஒரு பணியாளரின்
அரக்கு நிறச் சட்டைப் பொத்தானின்
உடைந்திருந்த அரைவட்டமும்
மட்டும்
நான் உண்டுவிட்ட வந்த
நிஜம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|