உலகமயமாக்கல்
ஒண்டிப்புதூர் தேவமணி
உலகமயமான...
கண்களில் சுரக்கும்
பாலை அருந்தி வாழும் பிஞ்சு.
உமிழ் நீர் உரத்தால்
வீரம் விளையும்
இருண்ட கண்டத்தின் மத்தியில்
இன்னும் பயிராகிக் கொண்டிருக்கிறது
விதைகள் இலவம்பஞ்சாய்
வீதியில் விதைக்கப்படுகிறது
கொத்தி உழுத நிலங்களை
ஒதுக்குவதில்லை எனினும்
அந்நிலங்களைத் தானே உண்டாக்கும்.
மருந்து தூவலில்
முறிந்த கிளைகள் ஒட்டுவதில்லை
ஒட்டிய கிளைகளில்
சுவைமிக்க பழங்கள் பிறக்கின்றன
களைகள் கருகுவதும்
தலைநிமிர்ந்து வளருவதும்
தலைவிதி என்கிறார்கள்
பண்பட்ட விவசாயிகள்
இந்த விவசாயம் உலகமயமாக்கப்பட்ட
பிரபஞ்ச பிரம்மாக்களின் கண்டுபிடிப்பு.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|