|
என்.பி. வேலுமணி கவிதை
முன்னேறத் துடிக்கும்
இளைஞனே! நீ!
தண்ணீர் ஊடுருவாமல் இருக்க - அந்த
தண்ணீராலேயே பக்குவப்படும்
கான்கிரீட் தளம்போல
எதிர்வரும் சோதனை கண்டு
விலகி ஓடாமல் அதனையே
இயல்பாய் உள்வாங்கிப்பார்!
அதுவே உன் இதயத்தை
எதனையும் தாங்கும் உறுதிமிக்க
கான்கிரீட்டாய் பக்குவப்படுத்தும்!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|