|
வடுவூர் சிவ. முரளி கவிதை
அது அப்படியேதான் இருக்கிறது
நீங்கள்தான்
இடம்மாறி இருந்து கொண்டு
இருப்பதைப் பழிக்கிறீர்கள்
வடக்கே நின்றுகொண்டு
தெற்கே இருக்கிறதென்கிறீர்கள்
கீழே இறங்கிக்கொண்டு
மேலே இருக்கிறதென்கிறீர்கள்
குளிர்ந்து போனது நீங்கள்
அது சூடாக இருக்கிறதென்கிறீர்கள்
நீங்கள்
நீர்த்துப் போய்விட்டு
அது இறுகிவிட்டது என்கிறீர்கள்
அதன் இடத்திலிருந்து
அதனைப் பார்க்காவிட்டால்
உங்கள் கோணம்
கோணலாகத்தானே இருக்கும்?
வடுவூர் சிவ. முரளி
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|