ரா. ராஷிகா கவிதைகள்
அலைகள் ஓய்வெடுத்தால்
அழகில்லை கடலுக்கு
இதயம் ஓய்வெடுத்தால்
சுவாசம் இல்லை உடலுக்கு
சூரியன் ஓய்வெடுத்தால்
விடிவில்லை பூமிக்கு
தோழியே வா
எறும்பாய் உழைப்போம்
கோபுரமாய் உயர்வோம்
0
பள்ளிக்கூடம் கோவில்தான்
படிப்பவர்களுக்கு
தோல்விகூட வெற்றிதான்
சாதிப்பவர்களுக்கு
சத்தங்கள்கூட சங்கீதம்தான்
கலைஞர்களுக்கு
முயற்சிகூட மூலதனம்தான்
உழைப்பவர்களுக்கு
வாழ்க்கை முழுவதும் வசந்தம்தான்
வாழத் தெரிந்தவர்களுக்கு
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|