|
இறக்கத் தொடங்கியிருக்குமெனது காலம்
புன்னகை சேது
மரம் கிளரும் மரங்கொத்தியன்றின்
இலாவகத்துடன் கொத்தி நெறிப்படுத்தப்பட்ட
என் தோட்டம் முழுவதும் பதியமிடுகிறேன்
ஒரு வனாந்தரம் வளர்க்கும் நோக்கில்...
உனது குரல்களை...
அவை இறுகிக் கிடக்குமென் மௌனமுடைத்து
உடலெங்கம் வேர்களை நீட்டியபடி...
முளைக்கத் தொடங்கின...
உயிரதிரும் பெருமோலத்தோடு...
அவ்வாறே பூக்கவும்தான்...
எண்ணிற்குள் அடைக்கவியலா...
பல்வகை பூக்கள் பூத்துதிர்ந்தபின்...
காய்த்து குதூகலிக்கத் தொடங்கின
அரளிச் செடிகள் மட்டும்...
விவரிக்க முடியா கடும்பசி துரத்த
நன்கு பழுத்து வெடித்த விதைதேடி...
உண்ணத் தொடங்குகிறேன்
நூற்றாண்டு காலம் வாழும் கனவுடன்...
அதே கணமொலிக்கத் தொடங்குகிறது
பெருங்கடல் குடித்து வெளியேறி
பொழியும் மழைபோல்
பெருங்குரூரத்தின் ஆதியாய்
உனது குரல்...
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|