மௌனம் ரமேசு கவிதைகள்
அறுந்து
துடிக்கிறேன்
திரும்பவும் முளைக்கிறது
சிமிழ்க்காத நாள்
இரவைத் தீர்த்து
0
இந்த சுவாரஸ்யமற்ற பயணம்
கடக்க விரும்பாத
பாலையென நீண்டிருக்க
எங்கோ
வெகு அருகில்
இளைப்பாறலை முன்வைத்து
விரிந்தழைக்கிறது
மரணத்தின் நிழல்
0
நிரம்பி
உடையும் கோப்பைகள்
தீண்டி
தீர்க்கும் பிரியங்கள்
அணிவித்து
அவிழ்க்கும் பருவங்கள்
செத்து
சாமியாவான் நாத்திகன்
அடுத்த கணம்
பிரும்மாண்டம்
0
எந்தக் கோணத்தில் நோக்கவும்
அத்தனை திருப்தியாக இருக்கிறதில்லை
அவரவர்களின்
அறையையத்து
எனது அறையும்
மௌனம் ரமேசு
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|