|
கணேசகுமாரன் கவிதை
சாயங்காலப் பெருமழைக்குப் பிறகு
பச்சையம் கூடியிருந்த
ஒவ்வொரு செடியிலும்
அத்தனை மஞ்சள் பூக்கள்
குளிர் காற்று
கொண்டு வந்து சேர்த்த
பிங்க் நிற பாலிதீன் பை
நான்கு பூக்களை மட்டும்
பறித்துப் போகும்
பிறகு வந்த இருள்தான்
எல்லா வண்ணங்களையும்
சாகடித்தது.
கணேசகுமாரன்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|