நீரடித்து நீர்விலகாது
இளங்கவிஅருள்
இன்றுடன் எனக்கு வயது நாற்பத்தொன்று
முடிகளுக்கு வண்ணமடித்து ஒப்பனை செய்கிறேன்
தொப்பைக் குரங்கைப் பார்த்ததாய்
வியந்து சொல்லும் எனது மூத்த மகன்
எனது மடியில் உள்ளதை
பயமற்று களவாடும் வீட்டுப்பூனை
எனது கிறுக்கல்களை சேகரித்த குட்டிக் குரங்கு
அது பயனற்றது என்று தூக்கியெறிய
சிதறிய படைப்பை கழுதைதின்ற மீதியை செல்லரிக்க
அனாதையாய் கிடந்த எனது சொல்லை
சுமந்து செல்லும் மணக்கும் எறும்பு
மகரந்த பூச்சியின் முறுவலோடு
காற்றில் மிதந்த படைப்பு
வண்ணத்துப்பூச்சியின் சிறகாய்மாறி
புயலை எதிர்க்க முடியாமல்
திசைக் கொன்றாய் நீர்த்துப்போக
நீரால் உருவானவன் கருவையும், கவிதையையும்
நீரே அடித்துச் சென்றது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|