பா. ராஜா கவிதை
யாரோவொரு புதியவனை அச்சுறுத்த
தெரு நாய் குரைக்குமொரு முன்னிரவில்
நிலவைத் தேடி களைத்த கண்கள்
மொட்டை மாடியிலேயே முடங்கிக் கொள்ள
சூரியனை ஏளனம் செய்துவிட்ட
தூக்கத்தின் முகத்தில்
எச்சமிட்டுப் போகும்
பெயர் தெரியா அப்பறவையறியாது
முந்தைய இரவின்
என் வீட்டின் துக்க நிகழ்வை
பா. ராஜா
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|