அலையில் வரும் கவிதை
கவிதையை முன்னெடுத்துச் செல்ல நவீன ஊடகங்களைப் பயன்படுத்தும் முன்மாதிரியாக குறுஞ்செய்தி வழியாகவும் நம்மை கவிதைகள் வந்தடையத் துவங்கியுள்ளன. ஏற்கனவே ஹைக்கூ கவிதையினை கன்னிக்கோயில் ராஜா அனுப்பி வருகிறார். இப்போது புதுவையிலிருந்து "போதிக்காற்று" கவிதைகளை ஏந்தி வருகிறது. 17.06.2008 முதல் தொடங்கி, துவக்கத்தில் 100 பேருக்கு இச்சேவையை துவங்கி 250 பேருக்கும் மேலானவர்களை கவிதை சென்றடைகிறது.
கவிதைகளோடு அல்லாமல் இலக்கிய நிகழ்ச்சி மற்றும் நூல் வெளியீடு தொடர்பான நிகழ்வுகளையும் அனுப்பி வருகிறது. பாவலர்களின் பெயர், ஊர், தொலைபேசி எண்ணுடன் இச்சேவை உள்ளதால் படைப்புகள் எளிதில் பிறரால் அறியப்படுகிறது. மாலை மற்றும் முக்கிய நாளில் மேலைநாட்டுப் பாவலர்களின் சிறந்த பாக்கள், ஆங்கில வடிவம் மற்றும் மொழிபெயர்ப்பாக நம்மை வந்தடைகிறது.
நீங்களும் கவிதை அனுப்பலாம். தொடர்புக்கு :
போதிக்காற்று, ம.ஞானசேகரன், 8.காமராசர் தெரு, முத்தரையர் பாளையம், புதுச்சேரி - 605 009. எண் : 98425 79597, 94421 79598
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|