|
ஒட்டி இருந்த உயிர்
ஆட்டையாம்பதி எம். தர்மராஜ்
காலை நேரம்
குயில் கூவும்
மேகக் கூட்டத்தைக் கண்டவுடன்
மயில் ஆடும்
வண்ணத்துப்பூச்சி
வானில் வட்டமடிக்கும்
மின்மினிப்பூச்சி
இருட்டை ஒழிக்க
முயற்சித்தது
எங்கோ வெகுதூரத்தில்
ஓநாய் ஒன்று ஊளையிட்டது
நெடுநாளாய்
உடல் என்னும் கூட்டில்
ஒட்டி இருந்த உயிர்
காற்றில் கலந்தது மெல்ல மெல்ல!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|