கல்லறை வேண்டி
தி. சண்முகசுந்தரம்
காதலர்களே
எல்லா கவிதைகளையும்
எழுதி முடித்தீர்கள்
எதுவும்
எழுத முடியவில்லை என்னால்
உவமையும் மிச்சம் வைக்கவில்லை
எனக்காக
ஒவ்வொரு நிமிடங்களையும்
உன்னத சூழ்நிலையாக்கி உலகையே தன் வசப்படுத்திக் கொண்டீர்கள்
ஒவ்வொரு மரணத்திற்கும் ஒருவித காரணம் கூறி
மரணத்தில் முடியாததை மரணத்தில் இணைத்துக்கொண்டீர்கள்
கவிதைகள்தான் வைக்கவில்லை என்னவளுக்காக
கல்லறைகளையாவது விட்டுச் செல்லுங்கள் எனக்காக
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|