சிறு பறவையின் வரவென
கணேச குமரன்
சலனமற்ற பிற்பகல் ஆகாயத்தில்
சிறு பறவையின் வரவென
சீறிச் செல்கிறது
பல அதிர்வுகளை உண்டாக்கும்
உன் நிகழ்வு
கீறிக் கொண்டேயிருக்கிறது
கலைந்து வானில் கவிதைகள்
நீ விட்டுச் சென்ற வாசனையும்
யோசனையும்
அளவற்ற வலிகளுடன்
அலையும் வானம்
கூர் நகங்களற்ற பறவை தேடி
சதா இரத்தம் வழியவிட்டு
பொழிகிறது ஒரு மழை
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|