நேசம்
ஆர். ரத்தினசாமி
பஞ்சுப் பாதங்களால்
என் மார்பில் நடந்து
கொண்டிருந்தது
அந்த வெள்ளைப் பூனைக்குட்டி...
மணல்நிறச் சிட்டுக்குருவியை
உறுத்தாதபடி விரல்களில்
தடவிக் கொண்டிருந்தேன்
மடியில் வைத்து....
செடிப் பூவின் நறுமணத்தை
நாசியால் நுகர்ந்தேன்
தொடாமலும் படாமலும்....
சிறுமழைத் தூறலில்
வெற்றுடம்பு நனைந்ததாய்
மகிழ்ச்சிப் பெருக்கத்தில்
என்உள் தகதகத்தது...
கவிதைவரிகள் சிற்றெறும்புக் கூட்டமென.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|