தலையங்கம்
புன்னகை
வணக்கம்
கோடை முடிந்து மழைக்காலம் தன் பணியைத் துவங்கிவிட்டது. எனினும் தமிழ்த் திரைப்படங்கள் அறியாமையிலும், வியாபார சூழ்ச்சியின் தந்திரத்திலும் வியர்த்துக் கிடக்கிறது. வெற்று ஆடம்பரம் மறுபடியும் துளிர்க்க துவங்கியிருப்பது ஆரோக்கியமான ரசனையாளர்களுக்கு மன வருத்தத்தை உண்டாக்கியிருக்கிறது. உலக சினிமா ஒன்று வெளியானதைப் போல மிகைப்படுத்தப்படுகிறது.
புன்னகை கேட்பினும் பெரிது கேள்!
கவிதை இதழ் : 53
ஆகஸ்ட் 2007
விலை. ரூ. 3.00
ஆசிரியர் குழு
க. அம்சப்ரியா
செ. ரமேஷ்குமார்
படைப்புகள், விமர்சனங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
புன்னகை - கவிதை இதழ்
68, பொள்ளாச்சி சாலை
ஆனைமலை - 642 104
04253 - 283017
ஆண்டு சந்தா ரூ. 25/
5 ஆண்டு சந்தா ரூ. 100/
பணவிடையாகவோ, தபால்தலையாகவோ அனுப்பலாம்.
|
ஒரு பதவிக்கான கெளரவம், அந்தப் பதவி வகிப்பவரால்தான் நிகழ்கிறது. குடியரசுத்தலைவர் பதவியில் இருந்த அப்துல் கலாம் அவர்கள் இன்னும் நிறைய செய்திருக்கலாம் என்று ஒரு சாரார் விமர்சனமும், அந்தப் பதவிக்கான வரம்புகளுக்குட்பட்டு, தான் செய்ததை அவருமாக கூறியிருக்கிறார்கள். பிரதிபா பாட்டீல் பதவிக்கு வருமுன்பே பல குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கிறார். ஒரு பெண் பதவிக்கு வருவது என்று மட்டுமே பெண் விடுதலையையும் உரிமையையும் பெற்றுக் கொடுத்துவிடாது. அப்படி நம்பினால் அதைவிட வேறு அறியாமை ஏதும் இல்லை.
தனியார் நிறுவனங்களில் பிடியில் சிக்கி சீரலைந்து வருகிற சாதாரண மக்களின் பொருளாதாரம் பற்றியோ, நிலத்தைப் பறிகொடுத்த மக்களின் மரண ஓலம் பற்றியோ, பேச இங்கு ஆட்கள் குறைவாகத்தான் இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு வேறு வேலைகள் நிறைய இருக்கின்றன! பிடித்தமான ஒரு நடிகனின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வதைவிடவா வேறு பிரச்னைகள் முக்கியத்துவம் வாய்ந்தது?
மக்களுக்கான ஒரு திரைப்படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்! எதிர்பார்ப்புகள் பூர்த்தியாக அவரவர் பிரார்த்தனை செய்ய வேண்டியதுதான்.
கலையும் இலக்கியமும் தொடர்ந்து அதற்கான எதிர்பதிவுகளை செய்து கொண்டிருப்பதுதான் சற்றே ஆறுதல் தருகிறது!
- புன்னகை
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|