இளங்கவி அருள் கவிதைகள்
நெருப்பின்றி புகைகிறது
பகுத்தறிவு ஜோசியர்களின்
நாளேட்டு குறிப்புகளால் _ தீ
உயிர்த்தின்று மகிழ்கிறது.
எம தர்பார்களில் பெருமூச்சில்
சமூகம் அடங்கிவிடுகிறது
மடி சுமக்கிறார்கள்
மை தாள்களில் இரக்கத்தில்.
நூறு கோடி பேர்களின்
நெருப்புத் துண்டுகள்
குறை பிரசவத்திற்கு
மனம் இரங்கிவிடுகிறது.
தாளத்திற்கு ஆடும் கால்களும்
சுயநலத்திற்கு அசையும் தலைகளும்
ஆற்றில் ஓடும் கற்களும்
காலமுரண்பாட்டில் நிற்கும்.
நெருப்பு எழுத்தை
வெளிப்படுத்தும் நிஜங்களை
தீயும், தீமையும்
எரிக்கலாம், அழிக்கலாம்
புதியதாய் பிறக்கும்
ஆயுத எழுத்தை?
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|