சத்தங்களால் செய்த வீடு
அனலேந்தி
அறையப்படும்
சத்தங்களால் செய்த
வீடு என்னுடையது
அதிகாலை எனச் சொல்லப்பட்டாலும்
பின்னிரவு நேரத்திலேயே
ஆரம்பமாகிவிடும்...
நேற்றின் பரபரப்பு அலைதல்கள்
பசிக்குறிப்புகள், தண்ணீர்த் தாகங்கள்...
இப்படி... எல்லாம் குறித்தும்
எதிர்த்தோ, ஆதரித்தோ குரல்கள்
மகள் குறித்து அம்மா கூறும்
முக்கிய சொற்கள் குறித்து
ஆத்திரமுடன் நான் சுட்டும்
அழுக்கேறிய வார்த்தைகளும்
அடக்கம் இதில்...
என்றோ படித்த வேதம் (அ) வாதம்
கோவில் சிலைக்குப் பதிலாக
கருமாதிக்காவது பயன்படுமா?
யாருக்குப் புரியும்
எனது சத்தங்ளால் செய்த
வீடு குறித்து...
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|