யாரும் யாருடனும் இல்லை
ஜி. மஞ்சுளா, மதுரை
தேங்கி உறைந்து நிற்கும்
நினைவுகளை
எழுப்பிக் கொண்டுவரும்
உணர்வுள்ள பொழுதுகளில் எல்லாம்
யாருமற்று இருக்கிறோம் நாம்
சேர்ந்திருக்கும் போதோ
யாருமின்றி இருக்கிறது
நம் நினைவுகள்!
இசை கவிதைகள்
ஒரு சொல்
அதி ஆழமான பாழ் கிணறு
என் தனிமை.
ஒரு சொல்லிட்டு
நீ அதை நிரப்பு.
ஓயாத திகில்
என் உடல் ஆம்புலன்ஸ்
தலை சைரன் பல்ப்
சதா அலறி
நொடிக்கு நொடி பயந்து
ஓயாத திகில்
இப் பயணம்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|