கடவுளின் கண்களாய்
ஜனமித்திரன்
ஒரு தக்கையைப் போல்
அந்தச் சொல்
மிதந்து கொண்டிருந்தது
முடிவுகளற்ற பெருவெளியில்
இருபுறம் புரண்டோடும்
இருள்வெளியில்
கடவுளின் கண்களாய்
மிதந்து கொண்டிருந்தது
அலச்சல் கொண்ட புத்தியுடன்,
ஒங்கிக் கொள்ள இயலாமல்
பயண விளிம்புகளில்
ஆவேசமாய் உரசியபடி
அந்தச் சொல்
ஒரு தக்கையப்போல்
மிதந் கொண்டிருந்த
அர்த்தம் எனும் ராட்சத மீன்
பெரும்பசியுடன் விழுங்கும்வரை.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
|