யாராலும் எழுதப்படாத கவிதை
அதிஸ்யா
ஒரு சிறந்த கவிதைத் தொகுப்பிற்கு பக்க அளவுகள் முக்கியமில்லை. தரமே கவிதைகளை முன்னிறுத்துகிறது. இதை மெய்ப்பிக்க இதற்கு முன்பும் அங்கங்கு சிறுகவிதை நூல் வெளியீடுகள் வந்துள்ளன. கோவையிலிருந்து கவிஞர் தேவமகள் அறக்கட்டளையின் சார்பில் 'கடல்' இதழ் கவிதையென பொங்கியிருக்கிறது. நித்திலன் அவர்களின் 36 கவிதைகளைக் கொண்டுள்ளது.
தத்துவ தரிசனமும், கூர்ந்த பசுமை பார்வையும் வாழ்வு அவலங்களின் வெளிப்பாடாகவும் உயிர்த்துள்ள கவிதைகளில் கவிதையின் மாறுபட்ட குரலை உணரமுடிகிறது. நான்கு வரிகளுக்குள்ளயே சமூக அவலத்தையும் கவிஞர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
இப்படி ஏதேனும் ஒரு கவிஞரின் பல கவிதைகளைக் கொண்டு 'கடல்' தொடர்ந்து வெளிவருமாயின் இது நல்ல முயற்சிக்கான துவக்கமாக அமையும்.
சிலரைத் தவிர்க்க
பலரைத் தவிர்க்க நேரிடுகிறது
0
உச்சமான கவிதையை
யாரும் எழுதவில்லை இன்னும்
கற்பனைகளைக் கடந்த
உணர்ச்சிகளைத் தாண்டி
அருவத்தில் பயணித்து
அனுபூதியில் திளைத்து
கொள்கை கரைந்து
தத்துவம் விஞ்சி
உச்சமான கவிதையை
இன்னும் யாரும் எழுதவில்லை.
0
அறைகளிலிருந்து
அறைகளுக்குள்ளே சென்று
அறைகளில் மாட்டிக் கொண்டேன்
இதழ் : 'கடல்' வெளியீடு : கவிஞர் தேவமகள் அறக்கட்டளை, 50/99, ஆர்க்ஸ் நகர், பீளமேடு, கோவை - 641 004, தொலைபேசி : 0422 2591242.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|