Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Punnagai
Punnagai Logo
பிப்ரவரி 2008

அருணாதேவி கவிதைகள்

மழைக்காலம்

மலைகளில் மழை பெய்கிறது

நீர் மலை, ஏரி, குளம் என நிறைந்து

கடலில் கலக்குகிறது

வெயில் காலம்...

ஏரி, குளம் வற்ற

கடல் நீர்

ஏரி குளம் நிரப்புகிறது.

மழைக் காலமோ

வெயில்காலமோ

நிரம்பி வழிகிறது தண்ணீர்

உன் நினைவுகளால்

நிரம்பி வழியும் மனமாய்.

படகு நகர்கிறது

வேகமாக நகர்கிறது

நீர்த் தாவரங்கள் அறுபடுகின்றன.

நீர்த் தாவரங்கள் செடிகளாய், கொடிகளாய்.

நீர்த் தாவரங்களின் வேர்கள்

மெல்லியவை.

பூனைமயிர் போல் மெல்லியவை

மீண்டும் மீண்டும் கவ்விப்பிடித்து

தண்ணீரைத் தொட்டு உயிர்க்கின்றன.

அறுபட்ட வேர்களானாலும்

துளிர்க்கும்

உன் நினைவின் வேர்களும்

சுலபமாய் துளிர்ப்பவை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com