கழகத்திடம் ரூ.15 லட்சம் இழப்பீடு கேட்கிறார், வீரமணி!
பெரியாரின் ‘குடிஅரசை’ வெளியிடுவதன் மூலம், சுயமரியாதை பிரச்சார நிறுவனத்துக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்திவிட்டதால், பெரியார் திராவிடர் கழகம், ரூ.15 லட்சம் இழப்பீடு தரவேண்டும் என்று, ‘ஆயுள் செயலாளர் கி.வீரமணி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
• அன்று 1933 இல் இதே ‘குடிஅரசில்’ இன்றைய ஆட்சி முறை ஏன் ஒழிய வேண்டும் என்ற கட்டுரை எழுதியமைக்காக பெரியாருக்கு 9 மாத சிறையும், 300 ரூபாய் அபராதமும் விதித்தது, அன்றைய பிரிட்டிஷ் ஆட்சி.
• குடிஅரசு அடக்குமுறைக்கு உள்ளானபோது ‘புரட்சி’ வார ஏட்டை பெரியார் தொடங்கினார். அப்போதும், இடையில் மூன்று முறை பத்திரிகை நிறுத்தப்பட்டு, 2 தடவை ஜாமீன் பணம் கட்டுமாறு அன்றைய பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டது. இதனால் 5000 ரூபாய் வரை தனக்கு இழப்பு ஏற்பட்டது என்று எழுதினார் பெரியார்.
• அதே ‘குடிஅரசு’, ‘புரட்சி’, ‘பகுத்தறிவு’ ஏடுகளில் பெரியார் எழுதியதை மக்களிடையே கொண்டு செல்வதற்கு, இப்போது 15 லட்சம் இழப்பீடு கேட்கிறார், ‘ஆயுட்கால செயலாளர்’ கி.வீரமணி. அன்று - பிரிட்டிஷ் அடக்குமுறையை குடிஅரசு சந்தித்தது. இன்று - ‘ஆயுள் செயலாளர்’ கி.விரமணியின் அடக்குமுறை - ‘குடிஅரசு’ தொகுப்புகள் மீது பாய்கிறது!
இவர்கள் தான் தமிழர் தலைவர்களா?
இவர்கள் தான் பெரியாரின் வாரிசுகளா?
பெரியார் கொள்கைகளுக்காக இன்னும் வீரமணியை நம்பிக் கொண்டிருக்கும் திராவிடர் கழகத் தோழர்களே!
இதுதான் பெரியாரைப் பரப்பும் பணியா? - மனசாட்சியை அடகு வைக்காமல் சிந்தித்துப் பாருங்கள்!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|