Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puratchi Periyar Muzhakkam
நவம்பர் 2006

கொளுத்து தோழா கொளுத்து!

கொளுத்து தோழா கொளுத்து!
உளுத்துச் சிதையும் ஓட்டை அமைப்பை
உழைப்பைச் சுரண்டும் திருட்டுத் தனத்தைக்
கொளுத்து தோழா கொளுத்து!
மொய்லி அறிக்கையைத் தீயில் போடு
முட்டாள்களின் பொய் வாயை மூடு
நெய்யும் சோறும் தின்றும் ‘எல்லாம்
நேக்கே’ என்பான்; வை,நீ சூடு
இடஒதுக்கீடு பிச்சை யல்ல
எங்கள் உரிமை என்று முழக்கு
படமெடுத் தாடும் பாம்புகள் தம்மின்
பல்லைப் பிடுங்கும் போரைத் தொடங்கு
உச்ச நீதி மன்றம் என்பதே
உச்சிக் குடுமிகள் மன்றம் ஆனதா?
மிச்சம் மீதி இன்றி மேயவே
மேற்படி யாரின் வாய்க்குப் போனதா?
மண்டல் வந்து ஓங்கி அடித்தும்
மண்டை வீக்கம் குறைய வில்லை
சிண்டு முடியும் ‘இந்து’ ‘தினமலர்’
செய் குறும்புக்கு அளவே இல்லை
மனுவைக் கொண்டு சாதி பிரித்தான்
மக்களில் மேல்கீழ் பிளவு நுழைத்தான்
தினவெடுத்தே கொழுத்துத் திரிகிறான்
செருப்புத் துடைத்தே இழிவு செய்கிறான்
அண்ணல் அம்பேத்கர் தந்தை பெரியார்
அரிய உழைப்பால் விளைந்த உரிமை
புண்ணின் நோவு நமக்கே; அதனைப்
புரிந்து கொள்ளுமோ அந்த எருமை
பூவாகும் முன் போட்டு மிதிக்கிறான்
பொருளாதாரப் பூட்டை நுழைக்கிறான்
சாவா வாழ்வா பார்ப்போம் தோழா
சாம்பலில் இருந்தும் உயிர்ப்போம் தோழா
சட்டம் நீதி தடுத்தால் தகர்ப்போம்
சனாதனத்தின் கழுத்தை நெரிப்போம்
குட்டக் குட்டக் குனிதல் இல்லை
குருதி சிந்திடும் போர்தான் எல்லை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.