ஈழப் பிரச்சினையைப் பேசத் தடையா? தேர்தல் ஆணையம் விளக்கம்
ஈழத் தமிழர் பிரச்சினைப் பற்றி தேர்தல் களத்தில் பேசக் கூடாது என்றும், அது தொடர்பான வெளியீடுகளை அச்சகங்கள் வெளியிடக் கூடாது என்றும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் என்ற பெயரில் மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்திருப்பது உண்மைதானா என்று தமிழக தேர்தல் ஆணையர் நரேந்திர குப்தாவிடம் வழக்கறிஞர்கள் குழுவாக சென்று நேரில் கேட்டபோது, தேர்தல் ஆணையம் அத்தகைய விதிமுறைகள் எதையும் அறிவிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். அப்படியானால் மறுப்பு அறிக்கை வெளியிடுங்கள் என்று, வழக்கறிஞர்கள் குழு கேட்டபோது நாங்கள் வெளியிடாத அறிக்கைக்கு எப்படி மறுப்பு தெரிவிக்க முடியும் என்று பதிலளித்துள்ளார். ஆனாலும் - தமிழக காவல்துறை தமிழ்நாட்டில் தேர்தல் முடியும் வரை ஈழத் தமிழர் பிரச்சினைகளைப் பேச விடாமல் தடுக்கும் முயற்சிகளை திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றன. மயிலாடுதுறையில் கழக சார்பில் நிறுவப்பட்ட ஈழத் தமிழர் படுகொலைகளை சித்தரிக்கும் கண்டனப் பதாகைகளை அகற்றியுள்ளனர். தனியார் நிறுவனங்களில் நிறுவப்பட்டுள்ள இத்தகைய பதாகைகளும் நீக்கப்படுகின்றன.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|