Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜூன் 2009

மலையாள அதிகாரிகள் பிடியில் ‘இந்திய’ நிர்வாகம்

மத்திய அமைச்சரவையில் கேரள அமைச்சர்களுக்கு முக்கிய பொறுப்புகளும், ஏராளமான மலையாள அதிகாரிகளுக்கு மத்திய அரசு பணியும் வழங்கப்பட்டுள்ளது. மத்தியில் மீண்டும் பதவி ஏற்றுள்ள காங்கிரஸ்தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒரு முடிவை எடுத்துள்ளது. அமைச்சரவை செயலாளர் கே.எம்.சந்திரசேகர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரது பணி காலத்தை நீட்டிப்பதற்கு எடுத்துள்ள முடிவால், நாட்டின் உயர் பதவியில் முத்திரை பதிக்கும் பெருமை கேரளாவுக்கு கிடைத்துள்ளது. இவர்கள் தவிர வெளியுறவு செயலாளர் சிவ் சங்கர் மேனன், பிரதமரின் முதன்மை செயலாளர் டி.கே.ஏ.நாயர், நாடாளுமன்ற செயலாளர் ஜெனரல் பி.டி.ட்டி. ஆச்சாரி குடியரசு தலைவர் செயலாளர் கிறிஸ்டி பெர்னாண்டஸ், உள்துறை செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜி.கே.பிள்ளை ஆகியோரும் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

அதேபோல், தொழிலாளர்கள் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சக செயலாளர் திருமதி சுதா பிள்ளை மற்றும் வணிகத் துறை செயலாளரான அவரது கணவர் கோபால் கிருஷ்ண பிள்ளை ஆகியோரும் மலையாளிகள்தான். இது மட்டும் அல்லாமல், சமீபத்தில் தொடங்கப்பட்ட தேசிய விசாரணை ஆணையத்தின் (என்.ஐ.ஏ.) முதல் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்ட ராதா டிவினோத் ராஜூவும் கேரளாவை சேர்ந்தவர்தான். அதோடு வேளாண்மை செயலாளர் டி.நந்தகுமார், சட்டத்துறை செயலாளர் டி.கே.விசுவநாதன், விமான போக்குவரத்துத் துறை செயலாளர் எம்.மாதவ நம்பியார், இஸ்ரோ தலைவரும், விண்வெளி ஆராய்ச்சித் துறை செயலாளருமான ஜி.மாதவன் நாயர் ஆகியோரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இதேபோல், கனிம வளர்துறை செயலாளர் சாந்தா ஷீலா நாயர், கடல் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவன தலைவர் லீனா நாயர் ஆகியோரும் கேரளாவை சேர்ந்தவர்கள் . அதிகாரிகள் மட்டத்தில் மட்டும் அல்லாமல், அமைச்சர்கள் வட்டத்தை பார்த்தாலும் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள்தான் அதிகம் இடம் பெற்றுள்ளனர். கேபினட் அமைச்சரவையில் 2-வது முறை ராணுவ அமைச்சராக ஏ.கே.அந்தோணி, வெளி நாட்டில் வாழும் இந்தியர் விவகாரங்கள் துறை அமைச்சராக வயலார் ரவி ஆகியோரும் இணை அமைச்சர் பதவிக்கு இரயில்வே துறையில் இ.அகமது, வேளாண்மை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறையில் கே.வி.தாமஸ், உள்துறையில் முல்லப் பள்ளி ராமச்சந்திரன், வெளி விவகாரத் துறையில் சஷி தரூர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்கள்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் தொடர்புடைய எம்.கே. நாராயணன், சிவசங்கர மேனன், ஏ.கே. அந்தோணி, விஜய் நம்பியார் (அய்.நா. அதிகாரி), அவரது சகோதரர் சதீஷ் நம்பியார் (இலங்கை ராணுவ ஆலோசகர்) ஆகிய அனைவருமே மலையாளிகள் தான்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com