தஞ்சையில் சுப.வீ.
எழுதிய நூல் திறனாய்வு
தஞ்சை பெசன்ட் அரங்கில் 10.7.05 அன்று மாலை 6 மணியளவில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் எழுதிய ‘பெரியாரின் இடதுசாரி தமிழ்த் தேசியம்’ நூல் அறிமுகமும் கருத்தாய்வும் நடந்தது. தோழர் கி.முருகேசன் தலைமையில் தோழர்கள் பனசை அரங்கன், அன்புத் தென்னரசு, குப்பு. வீரமணி, இரத்தினகிரி, முனைவர் இராமலிங்கம், முனைவர் இராம. சுந்தரம், பேராசிரியர் விருத்தாசலனார், விடுதலை இராசேந்திரன் ஆகியோர் நூல் பற்றி கருத்தாய்வுகளை வழங்கினர். பேராசிரியர் சுப.வீரபாண்டியன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நீதிமன்றத் தடைகாரணமாக அவரால் பேச முடியவில்லை.
முதல் நாள் 9 ஆம் தேதி குடந்தையில் பேராசிரியர் ஜெயராமன் நூல் ஆய்வுரை நிகழ்த்தினார்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|