அமைச்சர் டி.ஆர்.பாலுவின் ஆணவப் பேச்சு
தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு, பிரணாப் முகர்ஜி இலங்கைக்குப் போகாமல் தமிழர்களை அவமதிப்பதை நியாயப்படுத்துகிறார். வெளிநாட்டுக்கு, "நினைத்தபோது போய் விட முடியுமா? கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து விட முடியுமா?" என்று காங்கிரசார் கூட பேசத் தயங்கும் வார்த்தைகளை தான்தோன்றித்தனமாக கூறியிருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.
நினைத்த போதெல்லாம் போய்விட முடியுமா? என்பது உண்மையானால், உடனடியாக இலங்கைக்குப் போய் போரை நிறுத்தச் சொல்ல வேண்டும் என்று தமிழக முதல்வர் கலைஞர், ஏன் டெல்லி சென்று வலியுறுத்தினார்? ஏன், அனைத்துக் கட்சியினர் தீர்மானம் போட்டார்கள்? டி.ஆர். பாலு, இந்த ஆணவமான பதிலால் அவருக்குப் 'பதவி பிச்சைப்' போட்டுள்ள தமிழக முதல்வர் கலைஞரைத்தான் அவமதித்திருக்கிறார். தலை இருக்கும்போது வால்கள் ஏன் ஆடுகின்றன?
டிராக்டர்கள் வேலை நிறுத்தத்தைச் சரியாகக் கையாளாமல் போனதற்காக குட்டு வாங்கி நிற்கும் டி.ஆர்.பாலு, பிரதமரிடம் நம்பிக்கையைப் பெறு வதற்காக இந்த துரோகக் குரலை ஒலிக்கிறாரா?
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|