Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜனவரி 2009

'போர் நிறுத்த' அணி


விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தோழர் திருமாவளவன் ஈழத் தமிழர்களுக்காக கூட்டணி அரசியலையும் கடந்து உண்மையான பங்களிப்போடு, தொடர்ந்து போராட்டங்களையும், இயக்கங்களையும் நடத்தி வருகிறார். ஈழத் தமிழர் போராட்டம் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள சூழலில், பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கி, தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி உருவாக்கி வைத்த தேக்கத்தை தகர்ப்பதிலும் வெற்றி பெற் றுள்ளார். இதற்காக தமிழின உணர்வாளர்கள் தோழர் தொல். திருமாவளவன் அவர்களுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் என்றென்றும் நன்றி கூறி வாழ்த்துவார்கள்.

அய்ந்து நாள் பட்டினிப் போராட்டத்தை முடித்த நிலையில், ஈழத்தில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் தமிழக கட்சிகள், இயக்கங்கள் ஒரே அணியாகத் திரள வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்மொழிந் துள்ளார். இது பாராட்டி வரவேற்று செயல்படுத்த வேண்டிய ஆக்கப்பூர்வமான யோசனையாகும். இப்போது ஈழத் தமிழர்களுக்கு எதிரான துரோகத்தில் வெளிப்படையாக தங்களை அடையாளப்படுத்திடும் கட்சிகள் காங்கிரசும், ஜெயலலிதாவும் தான்! (ஜெயலலிதா கட்சியிலுள்ள பல உணர்வுள்ள தமிழர்களே, ஜெயலலிதாவின் துரோகக் கருத்துகளை ஏற்கவில்லை என்பதே உண்மை)

ஜெயலலிதா தலைமையில் கூட்டணி சேர்ந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க. ஆகியவை, ஜெயலலிதாவின் துரோகக் கருத்துகளை இந்தப் பிரச்சினையில் ஏற்காமல், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தங்களது உறுதியான கருத்துகளை வெளிப்படுத்தியும், போராடியும் வருகிறார்கள். வழக்கம் போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தனது பார்ப்பன அடையாளத்தையே இப்பிரச்சினையில் வெளிப்படுத்தி வருகிறது. காசா பகுதியில் இஸ்ரேல், பாலஸ்தீனர்களைக் கொன்று குவிப்பதும், ஈழத் தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவிப்பதும் ஒன்றுதான் என்ற பார்வை அக்கட்சிக்கு இல்லை. தேசிய சுயநிர்ணய உரிமைக்காக மக்களோடு போராடும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு பயங்கரவாத முத்திரை குத்திடும் ஏகாதிபத்திய நாடுகளின் குரலையே இக்கட்சியும் எதிரொலிக்கிறது.

தி.மு.க.வைப் பொறுத்த வரை அதன் இரட்டை வேடம் வெளிப்படையாகவே அம்பலமாகி வருகிறது. தமிழின உணர்வு என்ற தளத்தில் கால் பதித்து நிற்கும் தி.மு.க., அந்த உணர்வுகளுக்கு எதிரான துரோகம் காங்கிரசிலிருந்து வெளிப்படும்போது, 'கூட்டணி ஆட்சி அதிகாரம்' என்பதற்கே முன்னுரிமை தந்து, மீண்டும் மீண்டும் பழைய வரலாற்றுப் 'பெருமை'களைப் பேசி, அதற்குள் தன்னை முடக்கிக் கொள்ளவே விரும்புகிறது.

இந்திய தேசியப் பார்ப்பன ஆட்சி வெளிப்படையாக இழைக்கும் துரோகத்தைக் கண்டிப்பதற்கான வார்த்தைகளை முதலமைச்சர் கலைஞர் இன்னும் தேடிக் கொண்டே இருக்கிறார். தமிழகத்தின் ஆளும் கட்சியாக இருந்தும் என்ன பயன்? டெல்லிக்கு அடிமை ஆட்சியாகத் தானே இருக்க வேண்டியிருக்கிறது? இத்தனைக்கும் மத்தியில் நடப்பது கூட்டணி ஆட்சிதான். காங்கிரசுக்கு பெரும்பான்மை இல்லை. ஆனாலும், பார்ப்பன ஆட்சி அதிகாரமே நாட்டை வழி நடத்துகிறது! முடிவுகள் எடுப்பதும், செயல்படுத்துவதும் 'அவாள்'கள் தான்.

தமிழக முதல்வர் கலைஞர் தம்மிடம் உள்ள அதிகாரத்தை இந்திய தேசிய ஆட்சியின் துரோகத்துக்கு எதிராக வெடித்துக் கிளம்பும் எழுச்சிகளை அடக்கவே பயன்படுத்துகிறார். அவரிடம் உள்ள அதிகாரம் மத்திய அரசை பணிய வைக்க பயன்படவில்லை. உண்மையைச் சொன்னால் தி.மு.க. ஆட்சி - வரலாற்று துரோகத்தை சுமந்து நிற்கிறது. தி.மு.க.வின் இந்த நிலையில் மாற்றம் ஏற்படும் அறிகுறிகள் ஏதும் தெரியவில்லை.

இந்த நிலையில் - 'வாழ்வா, சாவா' போராட்டத்தில் நிற்கும் ஈழத் தமிழர்களைக் காப்பாற்றும் உரிமைக் குரல் தமிழகத்திலிருந்துதான் எழுந்தாக வேண்டும். இதற்கு ஆதரவான மக்கள் எழுச்சியை மேலும் வலிமைப்படுத்த வேண்டும். வெளிப்படையான துரோக சக்திகள் ஒருபுறம்; ஆட்சி அதிகாரத்துக்காக அடங்கிப் போய் நிற்கவே விரும்பும் சக்திகள் மறுபுறம்; இந்தத் தடைகளுக்கு இடையே ஈழத்தில் போர் நிறுத்தம் செய்யவும், அவர்களின் விடுதலைக்கு ஆதரவாக இயக்கங்களை நடத்திச் செல்லும் அணுகுமுறைகளை உருவாக்கிடவும் வேண்டிய நேரம் இது. பிரச்சினையை தடம்புரளச் செய்துவிடாமல் போர் நிறுத்தம் கோரும் கட்சிகள், இயக்கங்கள், ஓரணியாகி - மக்கள் இயக்கத்தை நடத்துவதன் மூலம் துரோக சக்திகளை மக்கள் மன்றத்தில் பலமிழக்கச் செய்ய வேண்டும்! தோழர் திருமாவளவன் முன்மொழிந்துள்ள கோரிக்கை செயலாக்கம் பெற வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com